சென்னையில் நேற்று பெய்த திடீர் மழைக்கான காரணம் என்ன..?

சென்னையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே வறண்ட வானிலையே அதிகமாக காணப்பட்டது.நேற்று மதியம் முதல் பல இடங்களில் கனமழை பெய்தது. இந்த திடீர் மழைக்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

வளிமண்டலத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடல் பகுதியில் காலை வரை நீடித்தது. அது குறைந்த நேரத்தில் நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது சென்னை பகுதியில் மேக மூட்டம் அதிகமாக இருந்ததால் திடீரென இந்த கனமழை பெய்தது. இந்த திரள் மேகங்கள் குறையும் வரை சென்னையில் மழை நீடிக்கும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தத்தில், சென்னையில் எதிர்பாராத மழை பெய்துள்ளதாக ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!