ஆளுநருக்கு அழைப்பு விடுத்த சபாநாயகர் அப்பாவு

2022 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 5 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் கலைவாணர் அரங்கில் துவங்க உள்ளதால், சபாநாயகர் அப்பாவு ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

2022-ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் தான் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுவது வழக்கம்.

இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு ஆளுநர் ஆர்.என் ரவியை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். இதேபோல் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு- வும் ஆளுநரை நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!