மும்பையில் முழு ஊரடங்கு விதிக்கப்படும்

மும்பையில் கொரோனா தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை கடக்கும் போது முழு ஊரடங்கு விதிக்கப்படும் என மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ளார். மற்ற மாநிலங்களை காட்டிலும் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. இன்று நாடுமுழுவதும் 37 ஆயிரத்து 379 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அதில் 12 ஆயிரத்து 160 பாதிப்புகள் மகாராஷ்டிராவில் இருந்து பதிவாகியுள்ளது. குறிப்பாக மும்பையில் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், நகரில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடக்கும் போது முழு ஊரடங்கு விதிக்கப்படும் என்று கூறினார். இதனிடையே, ஏற்கெனவே 10 அமைச்சகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது

Translate »
error: Content is protected !!