தென்கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 8-ம் தேதி தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இலங்கையை ஒட்டி உருவாகவுள்ள வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக ஜனவரி 9ஆம் நாள் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள்மாவட்டங்களில் ஜனவரி 10ஆம் தேதி மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.குமரிக்கடல், மன்னார் வளைகுடாப் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!