அதிகரிக்கும் கொரோனா பரவல்.. உத்தரப்பிரதேசத்தில் பள்ளிகள் மூடல்

நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அரசு பள்ளிகளுக்கான நேரடி வகுப்புகளை டிசம்பர் 16-ம் தேதி வரை ரத்து செய்து உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது ஆன்லைன் வகுப்புகள் வழக்கம் போல் தொடரும் என்று கூறப்படுகிறது. மேலும், தற்போது அமலில் உள்ள இரவு நேர ஊரடங்குச் சட்டம் தொடரும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இவ்வாறு மாநில தலைமை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!