தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைப்பு – அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஜனவரி 20ஆம் தேதிக்குப் பிறகு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

மீண்டும் தேர்வு தேதி ஒரு வாரத்திற்கு முன்பே மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும், அரசு உத்தரவை மீறி தேர்வு நடத்தும் கல்லூரிகள் மூடப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி எச்சரித்தார்.

Translate »
error: Content is protected !!