கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததாக நடிகை திரிஷா ட்விட்

நாடு முழுவதும் ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

பல திரையுலகைச் பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த ஜனவரி 7 ஆம் தேதி, நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று அவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இதுவரை எந்த ஒரு அறிக்கையிலும் நெகட்டிவ் என்ற வார்த்தையை படிக்கும்போது மகிழ்ச்சியாக இருந்ததில்லை. உங்கள் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் அனைவருக்கும் நன்றிகள். இப்போது நான் 2022 ஆம் ஆண்டு தயாராக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!