உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் – பிரதமர் மோடி

தமிழர் திருநாளான இன்று தைப்பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் இன்று புத்தாடை உடுத்தி, தங்கள் வீட்டின் முன் பொங்கல் வைத்தும் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்,

தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த நாளன்று அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். இயற்கையுடனான நமது பிணைப்பும் நமது சமூகத்தின் சகோதரத்துவ உணர்வும் இன்னும் ஆழமாகதற்கு நான் பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!