கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கு: பாதிரியார் முல்லக்கல் விடுவிப்பு

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முல்லக்கல். இவரது கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள குரு விலங்காடு கன்னியாஸ்திரிகள் மடத்தைச் சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி , பிஷப் பிராங்கோ முல்லக்கால் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2018ஆம் ஆண்டு புகார் அளித்தார்.

பிராங்கோவை கைது செய்யக்கோரி மடத்தில் உள்ள கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாதிரியார் முல்லக்கல் அதே ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி கைது செய்யப்பட்டார். பிராங்கோ முல்லக்கிள் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் மீதான வழக்கு கோட்டயத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய அரசுத் தரப்பு தவறியதாகக் கூறி, பாதிரியார் முல்லக்கை விடுவிக்க கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Translate »
error: Content is protected !!