ஜம்மு காஷ்மீர் : 3 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கைது

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சோபுரா நகரின் டொர்புரா பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, சந்தேகத்தின் பேரில் சுற்றித் திரிந்த அர்ஃபத் முஜீத் தர், துஷீப் அகமது தர், மோமின் நசீர் கான் ஆகிய 3 பேரை போலீஸார் கைது விசாரித்தனர். இவர்கள் மூவரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 3 தீவிரவாதிகளையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

Translate »
error: Content is protected !!