தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம்

தூத்துக்குடியில், தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.

ஓட்டப்பிடாரம் அடுத்த கீழமுடிமண் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீமதி எனும் மாணவி அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி பல்வேறு சைக்கிள் ஓட்டுதல் போட்டிகளில் பதக்கம் மற்றும் கோப்பைகளை வென்றுள்ளார்.

மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க, டெல்லியில் பயிற்சி மேற்கொண்டு வந்த மாணவி, தேசிய அளவிலான சைக்கிள் ஓட்டுதல் போட்டியில், 3 பேர் கொண்ட குழுவில் தங்கப் பதக்கமும், தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.

Translate »
error: Content is protected !!