73-வது குடியரசு தினம்: தேசிய கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என். ரவி காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை கொடியேற்றும் போது,, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

73-வது குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தில் கவர்னர் ரவி தேசியக்கொடி ஏற்றுவது இதுவே முதல்முறை. முப்படையினர் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார்.

கொரோனா பரவல் காரணமாக கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக வரலாற்றை எடுத்துரைக்க, அலங்கார வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. சென்னையில் குடியரசு தின விழாவை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

Translate »
error: Content is protected !!