மக்கள் குடியரசு தினத்தை பாதுகாப்பாக கொண்டாட எல்லை பகுதியில் நாட்டை காக்கும் வீரர்கள்..!

குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரின் பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கொட்டும் பனியிலும், கடும் குளிரிலும் கண்காணிப்பை குறைக்க முடியாமல் 24 மணி நேரமும் ராணுவத்தினர் கடமையாற்றி வருகின்றனர். எத்தகைய அசம்பாவிதத்தையும் எதிர்கொள்ள ராணுவம் தயாராக உள்ளது. எல்லையில் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்துள்ள ராணுவ உயர் அதிகாரிகள் நாட்டு மக்கள் அச்சமின்றி குடியரசுதினத்தை கொண்டாடலாம் என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!