10, 11,12 வகுப்புகளுக்கு பிப்ரவரியில் பள்ளிகள் திறக்க பரிந்துரை – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,

10, 11,12 வகுப்புகளுக்கு பிப்ரவரியில் பள்ளிகள் திறக்க முதலமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளோம். பள்ளிகள் திறக்கும் போது ஒரு திருப்புதல் தேர்வு நடத்தப்படும். பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளை தரம் உயர்த்த முதலமைச்சர் எவ்வளவு முயற்சி செய்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்; தொடர்ந்து அரசு பள்ளிகளை மாற்ற முயற்சித்து வருகிறோம். நமது கொள்கை இருமொழி, அதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்றார்.

Translate »
error: Content is protected !!