ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – 3 பாதுகாப்பு வீரர்கள் காயம்

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் செக் நவ்கம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக நேற்று பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அப்படுத்தியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினான். துரிதமாக செயல்பட்ட பாதுகாப்புப் படையினர் உடனடியாக பதிலடி கொடுத்தனர், இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து, காயமடைந்த 3 பாதுகாப்புப் படையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!