அமெரிக்காவில் பனிப்பொழிவால் உறைந்து கிடக்கும் ரயில் தண்டவாளங்களுக்கு தீ வைப்பு

அமெரிக்காவின் சிகாகோவில், பனிப்பொழிவால் ரயில் தண்டவாளத்தில் பனி உறைந்து கிடப்பதால், தண்டவாளத்தில் தீ வைத்து பணியை உருகுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

சிகாகோ மாநகரப் பகுதியில் ரயில் சேவையை நடத்தி வரும் போக்குவரத்து நிறுவனமான மெட்ரா , பனிப்பொழிவின் போது தண்டவாளத்தில் தீ வைக்கும் நடைமுறையை பின்பற்றி வருகிறது. இதன் மூலம், தண்டவாளத்தில் பனி உருகுவதால் ரயில்கள் சீராக இயக்கப்படும் என கூறப்படுகிறது. தண்டவாளத்தில் தீ எரியும் காட்சிகளை பயணிகள் சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!