தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனை கைதி பேரறிவாளன் சிறுநீரக தொற்று மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற வேண்டி சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தக்க பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். சென்னை புழல் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதி பேரறிவாளன் சிகிச்சை பெற வேண்டி அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வருக்கு அளித்த மனு அடிப்படையில் அவருக்கு கடந்த மே மாதம் 30 நாள் பரோல் வழங்கப்பட்டது. இதனையடுத்து சிகிச்சை காரணமாக அவருக்கு 9 முறை பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் சிகிச்சைக்காக முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை வளாகத்தில் உரிய பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!