சாலை விபத்துகளை குறைப்பதே அரசின் முதன்மையான இலக்கு என முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முதல்வர் சாலை விபத்துகளை குறைக்க உயர்மட்ட குழு கூடி ஆலோசித்து, இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 திட்டம் தொடங்கப்பட்டதாக கூறிய அவர், இதன்மூலம் விபத்தில் சிக்கும் அனைவருக்கும் 48 மணி நேர இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுவருதாக குறிப்பிட்டார்.
இத்திட்டம் மூலம் இதுவரை 33 ஆயிரத்து 247 பேர் இலவச சிகிச்சை பெற்றுள்ளதாக கூறிய ஸ்டாலின், இதன்மூலம் 33 ஆயிரம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.