ஏப்ரல் 2-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை இலவச மருத்துவ முகாம்

 

சென்னை மெட்ரோ ரயில் நிலையம் சார்பில், வரும் ஏப்ரல் 2-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறவுள்ள இலவச மருத்துவ முகாமில் பொதுமக்கள் வந்து பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், எம்.ஜி.எம் மருத்துவமனையுடன் இணைந்து மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக இலவச மருத்துவ முகாமினை மெட்ரோ ரயில் நிலையங்களில் நடத்தி வருகிறது. மார்ச் மாதம் 14 நாட்கள் நடந்த முகாமில் 796 பேர் பயன் பெற்றனர்.

இந்த நிலையில் வரும் ஏப்ரல் 2-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறவுள்ள இலவச மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென சென்னை மெட்ரோ ரயில் நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!