பத்தாவது சிறப்பு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்கள் 

தமிழகம் முழுவதும் இன்று 600 இடங்களில் பத்தாவது சிறப்பு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதல்  நடைபெற்று வருகிறது. தமிழக அரசு சார்பில் வாரந்தோறும் வியாழக்கிழமை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் இன்று பத்தாவது வாரமாக தமிழகம் முழுவதும் 600 இடங்களிலும், சென்னையில் 160 இடங்களிலும் சிறப்பு பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் முகாம்கள்  அமைக்கப்பட்டுள்ளன.

 

Translate »
error: Content is protected !!