புற்றுநோய்க்கான வெளிநோயாளிகளின் மருத்துவ சேவை

மருத்துவமனைகளில், புற்றுநோய்க்கான வெளிநோயாளிகளின் சேவை எதிர்காலத்தில் விரிவுப்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் புற்றுநோய்க்கான வெளிநோயாளிகளின் சேவையை விரிவுப்படுத்தும் திட்டம் மத்திய அரசுக்கு உள்ளதா? என காங்கிரஸ் எம்.பி. விஜய்வசந்த் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

கன்னியாகுமரியில் அரிய வகை மூலிகைகளுடன் இயங்கும் அரசு சித்தா மருத்துவமனையில் புற்றுநோய்க்கான வெளிநோயாளிகளின் மருத்துவ சேவையை தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால், இந்தியாவில் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான வெளிநோயாளிகளின் சேவை நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். இது எதிர்காலத்தில் பிற மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் எனவும் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!