பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு சீல் வைத்ததால் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடில் சொத்து மற்றும் குடிநீர் வரி கட்டாத பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செங்கோடு நகராட்சி தீவிர வரி வசூலில் ஈடுபட்டுள்ளது. இதில் பிஎஸ்என்எல் அலுவலகம் கடந்த 3 ஆண்டுகளாக சொத்து மற்றும் குடி நீர் வரியாக 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிருந்தது.

இது குறித்து பல முறை நினைவூட்டல் கடிதங்கள் மற்றும் கால அவகாசங்கள் வழங்கியும் பலனில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பிஎஸ்என்எல் அலுவலத்தை பூட்டி  நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்த அதிரடி நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த பிஎஸ்என்எல் ஊழியர்கள் நீண்ட நேரம் அலுவலகம் வெளியில் காத்திருந்து விட்டு பின்னர் வீடுகளுக்குச் சென்றனர்.

 

Translate »
error: Content is protected !!