இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழாக குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. கொரோனா நிலவரங்களை தினசரி வெளியிட்டு வரும் மத்திய சுகாதாரத்துறை, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 86 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் 11 ஆயிரத்து 871 ஆக உள்ளது. நேற்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த ஆயிரத்து 198 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தீவிர தொற்றுக்கு 71 பேர் பலியாகிய நிலையில், கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 487 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 185 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!