திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் சி.ஆர்.பி.எஃப். பயிற்சி தளத்தில், துப்பாக்கிச்சூடு பயிற்சியின் போது, துப்பாக்கி குண்டு அருகிலிருந்த வீட்டின் மேற்கூரையில் பாய்ந்தது.
எம்.சி.ராஜா தெருவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இன்று காலையில் அவரது வீட்டின் கூரைப்பகுதியில் துளை ஏற்பட்டு துப்பாக்கி குண்டு கீழே விழுந்திருப்பதை பார்த்த ராஜேஷ் அதிர்ச்சியடைந்தார்.
இதைத்தொடர்ந்து சி.ஆர்.பி.எஃப். பயிற்சி தளத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு பயிற்சியின் போது, குண்டு பாய்ந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.