முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி – தருமபுர ஆதினம்

 

பட்டினப் பிரவேசத்திற்கான தடையை நீக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தருமபுர ஆதினம் நன்றி தெரிவித்தார். தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு மாவட்ட வருவாய்த்துறை தடை விதித்தது.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆதினங்கள் சந்தித்து, பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி கோரினர். தொடர்ந்து, இந்நிகழ்ச்சியை நடத்த முதலமைச்சர் வாய்மொழியாக அனுமதி வழங்கியதாக தருமபுரம் ஆதினம் தெரிவித்தார்.

இதனையடுத்து, தருமபுர ஆதீன பட்டின பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடைய நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கான தடையை நீக்கிய முதலமைச்சருக்கு தருமபுர ஆதினம் நன்றி தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!