காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்

காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேலவழுத்தூர், ஆற்றாங்கரை தெருவில்
அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். நடிகை நயன்தாராவின் திருமணம் விக்னேஷ்சிவன் உடன் விரைவில் நடைபெற உள்ள நிலையில் விக்னேஷ் சிவனின் குலதெய்வமான காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு நயன்தாராவும் விக்னேஷ்சிவனும் நேரில் வந்து பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு நேர்த்திக் கடனை செலுத்தினர். அப்போது அந்த பகுதியில் நயன்தாராவை பார்க்க ரசிகர்கள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என கூட்டமாக ஆவலுடன் வந்து பார்த்து சென்றனர். தொடர்ந்து நடிகை நயன்தாரா பொங்கல் பிரசாதங்களை பார்வையாளர்கள் அனைவருக்கும் வழங்கினார். நடிகை நயன்தாராவை பார்க்க அந்த ஊர் மக்கள் ஏராளமானோர் திரண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Translate »
error: Content is protected !!