அரசு அலுவலகத்தில் ஒசாமா பின்லேடன் புகைப்படம்

 

 

உத்தரபிரதேசத்தில், அரசு அலுவலகத்தில் ஒசாமா பின்லேடன் புகைப்படம் வைத்திருந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்த ஒசாமா பின்லேடன் சர்வதேச பயங்கரவாதியாக கருதப்பட்ட நிலையில் அவர் அமெரிக்காவால் கொல்லப்பட்டார்.

இந்தநிலையில் அவரை உலகின் சிறந்த இளநிலை பொறியாளர் என பாராட்டி, உத்தரபிரதேச மின்துறையில் பணியாற்றும் சப் டிவிஷனல் அதிகாரி ஒருவர் அலுவலகத்தில் அவரது புகைப்படத்தை வைத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்துள்ள உத்தரபிரதேச அரசு, அவரை பணி இடைநீக்கம் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!