திருப்பதியில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ.140.7 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின்னர் தற்போது கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் 22.8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் ரூ.140.7 கோடி காணிக்கை கிடைத்தது. இது புதிய சாதனையாக பதிவாகி உள்ளது.

Translate »
error: Content is protected !!