நிர்வாகிகளுடன் நவ.30ல் ரஜினி ஆலோசனை.. அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்க வாய்ப்பு

நடிகர் ரஜினிகாந்த், வரும் 30ம் தேதி ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களுடன் சென்னையில் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். இதன் முடிவில் அரசியல் தொடர்பான நிலைப்பாட்டை அறிவிப்பார் என்று தெரிகிறது.

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம், வரும் 30ம் தேதி சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில், மாவட்ட செயலாளர்களுடன் கட்சி தொடங்குவது தொடர்பான முக்கிய ஆலோசனையை ரஜினி மேற்கொள்கிறார்.

இது தொடர்பாக, தொலைப்பேசி வாயிலாக ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் வருகை குறித்து ரசிகர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பேன் என்று ரஜினி கூறியிருந்த நிலையில் இக்கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகிறது. இதன் முடிவில் அரசியல் நிலைப்பாடு குறித்த இறுதி முடிவை ரஜினி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!