பேனா நினைவுச் சின்னத்திற்கு முதல் கட்ட அனுமதி: மத்திய அரசு

சென்னை மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு அருகே வங்க கடலில் 360 மீட்டர் உயரத்தில் 80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு முதல் கட்ட அனுமதி மத்திய அரசு வழங்கி உள்ளது.

இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்து கேட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்று அடுத்த கட்ட பணியை தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் கடலில் பாலம் போன்று அமைத்து இந்த பேனா நினைவு சின்னம் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தமிழக அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்கும் பொழுது இது முதற்கட்ட அனுமதி மட்டுமே எனவும் இன்னமும் பல்வேறு அனுமதியை பெற வேண்டியது உள்ளது எனவும் தெரிவிக்கிறார்கள்.

Translate »
error: Content is protected !!