மின் கட்டண உயர்வுக்கு கண்டனம்: அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கடலூரில் பல்லாயிரக்கணக்கான அதிமுகவினர் ஒருங்கிணைந்து திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு தற்போது உயர்த்தியுள்ள மின் கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் தலைமையில் அதிமுகவினர் ஆயிரக்கணக்கானோர் திமுகவின் மக்கள் விரோதத்தை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தலுக்கு முன்பாக மக்களுக்கு நன்மை செய்வதாக தெரிவித்து ஆட்சியைப் பிடித்த பிறகு, ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு மக்களுக்கு எதிரான திட்டங்களையும் விலைவாசியை உயர்த்துவதே குறிக்கோளாக வைத்து மக்களை வஞ்சித்து விட்டதாக அதிமுகவினர் பலர் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நூற்றுக்கணக்கான போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!