ஜனவரி 8-ல் இருந்து இங்கிலாந்துக்கு விமான சேவை: மத்திய அமைச்சர் தகவல்

உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் இங்கிலாந்துக்கான விமான சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வருகிற 8-ந்தேதியில் இருந்து மீண்டும் தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் ஹர்திப்சிங் புரி தெரிவித்துள்ளார்.

 

கொரோனா வைரஸ் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் உலக நாடுகள் போக்குவரத்துக்கான தடைகளை மெதுவாக தளர்த்தி வந்தன. இந்த நிலையில்தான் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கின. இதனால் பெரும்பாலான நாடுகள் இங்கிலாந்துக்கான விமான சேவைகளை உடனடியாக ரத்து செய்தன. இந்தியாவும் ரத்து செய்துள்ளது. முதலில் நேற்று வரை தடைவிதித்திருந்தது. அதன்பின் தடையை வருகிற 7-ந்தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த நிலையில் 8-ந்தேதியில் இருந்து இங்கிலாந்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்திப்சிங் புரி தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!