உதயநிதி ஸ்டாலின் உள்பட 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

மத்திய அரசின் வேளான் மசோதாவை திரும்பப்பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்பட 150 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

மத்திய அரசின் வேளாண் மசோதாவை திரும்பப் பெறக்கோரி திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடந்தது. திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கட்சிகள் சார்பாக இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு, டி.கே.எஸ் இளங்கோவன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சிவ ராஜசேகரன் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்திருந்தும் தடையை நடத்தியதால் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கூட்டணிக்கட்சிகளைச் சேர்ந்த 20 பெண்கள் உள்பட 150 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!