பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை.. சாலையோரம் வீசப்பட்ட சம்பவம்

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை சாலையோரம் தனியாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று இரவு குடில் பகுதியில் சாலையோரம் கிடந்த குழந்தை அழுது கொண்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் உடனடியாக வந்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து குழந்தையை படுக்கைக்குள் வைத்து சாலையோரம் வீசி சென்றது யார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!