அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல்: ஓபிஎஸ், இபிஎஸ் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கட்சி தலைமை அலுவலகத்தில் திரண்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஆதரவு கோஷம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Translate »
error: Content is protected !!