“அண்ணாத்த”.. எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல் – வெளியீட்டு தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த. தற்போது இவர் நடிப்பில் உருவாகி உள்ள படம் “அண்ணாத்த”. இப்படத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.மேலும் இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

“அண்ணாத்த” படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியீட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

‘அண்ணாத்த’ படத்தின் முதல் பாடல் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாடலின் வரிகளை விவேக் எழுதியுள்ளார். இந்தப் பாடலை மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 25 -ம் தேதி காலமான எஸ்.பி.பி., அதற்கு முன் பாடலைப் பாடியிருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!