அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

அதிமுக ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மொத்தம் 69 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. தங்கமணி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புச் சோதனை நடத்தியுள்ள நிலையில் இதில் தங்கமணியும் இணைந்துள்ளார்.

சென்னையில் 14 இடங்களிலும், நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், கர்நாடகா, ஆந்திரா என முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய மொத்தம் 69 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!