போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் விடுதலை

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சில வாரங்கள் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்த ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் இன்று விடுவிக்கப்பட்டார்.

மும்பை, 

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கான் 20 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்த நிலையில் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மும்பை உயர்நீதிமன்றமும் ஜாமீன் நிபந்தனைகளை விதித்துள்ளது. அதில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். ஆர்யன்கான் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். மும்பையை விட்டு வெளியேற வேண்டுமானால் விசாரணை அதிகாரியின் ஒப்புதலை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!