தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாட்டம்…

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை இன்று கொண்டாடப்பட்டு வருவதால் களைகட்டியுள்ளது.

நவராத்திரி விழாவின் இறுதி நாளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொதுமக்கள் தங்களது வாகனங்களை சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

இதேபோல், மாணவ, மாணவிகள் தங்களது கல்வி சிறக்க வேண்டி, நோட்டு, புத்தகங்களை வைத்து சரஸ்வதியை வழிபடுகின்றனர். ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!