பாரதியாரின் 140வது பிறந்தநாள் இன்று – முதலமைச்சர் ஸ்டாலின் டுவீட்

மகாகவி பாரதியாரின் 140வது பிறந்தநாள் விழா இன்று தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது.

பாரதியாரின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், அன்பில் மகேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், இன்று மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்த நளை முன்னிட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

“நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, திறம்பாட வந்த மறவன்,அறம்பாட வந்த அறிஞன், படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்த நாள் இன்று. தமிழுக்குத் தொண்டுசெய்த பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும்” இன்று தெரிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!