உத்தரபிரதேசத்தில் அமைதியை சீர்குலைக்க ராகுல் காந்தி முயற்சிப்பதாக பாஜக குற்றச்சாட்டு

உத்தர பிரதேசத்தில் நடந்த வன்முறை திட்டமிட்ட தாக்குதல் என ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக, பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், உத்தரபிரதேசத்தில் அமைதியை சீர்குலைக்க ராகுல் காந்தி முயற்சிப்பதாக கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “ராகுல் காந்தியும் காங்கிரசும் விவசாயிகளின் இறப்பு பிரச்சினையை அரசியலாக்க முயல்கின்றனர். லக்கிம்பூர் நிகழ்ந்த வன்முறை குறித்து முறையான விசாரணை நடந்து வருகிறது. விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு விசாரணையை தொடங்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

Translate »
error: Content is protected !!