பாய்லர் வெடித்து 6 பேர் பலி

பீகாரின், முசாபர்நகரில் பாய்லர் வெடித்து 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.முசாபர்நகரில் நூடில்ஸ் தயாரிக்கும் பிரபல தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்தநிலையில் இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அங்குள்ள பாய்லர் வெடித்தது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இந்த சத்தம் உணரப்பட்டதாக தெரிகிறது. இதனை அறிந்து அங்கு திரண்ட உள்ளூர் மக்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து, ஊழியர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் 6 தொழிலாளிகள் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் 6 பேர் படுகாயமுற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த சம்பவத்தை உறுதி செய்த மாவட்ட தலைமை அதிகாரி, பாய்லர் வெடித்ததற்கான காரணத்தை விசாரித்து வருவதாக கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!