காவிரி ஆறு – பருந்து பார்வை காட்சிகள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரி ஆற்றில் செல்லும் 1 லட்சத்தி 5 ஆயிரம் கனஅடி நீர் ஆற்றின் பாலத்தில் இருந்து பருந்து பார்வை காட்சிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீர் 1லட்சத்து 33ஆயிரம் கன அடியில் இருந்து 1 லட்சத்தி 5 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு வருவதால் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்துள்ள நிலை மாறி சகஜ நிலை திரும்பி வருகிறது.

குமாரபாளையம் காவிரி ஆற்று பகுதிகளில் இருந்து பருந்து பார்வையில் காவிரி வெள்ளம் ஓடும் காட்சிகள் பார்ப்போரை மகிழ வைத்துள்ளது. குமாரபாளையம் பழைய பாலத்தையும் புதிய பாலத்திலும் வழியாக செல்ல காவிரி ஆற்று சீறிப்பாயும் வெள்ளம் காண்போம் மனதை கவர்ந்து வருகிறது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்த 16 வீடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் நகராட்சி பள்ளிகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை வருவாய்த் துறையினர் முறையே வழங்கி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!