தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு

வடகிழக்கு பருவமழையின் போது தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தமிழகத்தில் நடப்பு ஆண்டில் கனமழை பதிவாகி இருந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று மதியம் திடீரென பெய்த மழை மக்களை குளிர்வித்தது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிவகப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!