தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல் 29,30,31 ஆகிய 3 நாட்களுக்கு உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்கள் வரும் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Translate »
error: Content is protected !!