தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாயப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 27ம் தேதி மிதமான மழையும், 28 மற்றும் 29ம் தேதிகளில் தென் தமிழகத்தில் மிதமான மழையும் பெய்யும்.

மற்ற மாவட்டங்களில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும். சென்னையின் சில பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!