வீட்டு நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோர் வாந்தியால் அவதி

சட்டீஸ்கரில், வீட்டு நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட 51 குழந்தைகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அன்சுலா கிராமத்தில், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியராக இருக்கும் ஒருவரது வீட்டு விழாவில் விருந்து பரிமாறப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட 51 குழந்தைகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதியுற்றனர்.

அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உணவு விஷமாக மாறியதால், அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் பார்த்து, நலம் விசாரித்த அம்மாவட்ட ஆட்சியர் தோமன் சிங், சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!