சென்னை – திருவள்ளூர் புறநகர் ரயில் சேவை பாதிப்பு

சென்னையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழைநீரால் சென்னை-திருவள்ளூர் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், சென்னை மற்றும் அந்தன் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு முதல் விடியவிடிய முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆவடி, அம்பத்தூர் ரயில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மற்றொரு வழித்தடமான சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூர் – செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவை வழக்கம் போல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!