மின்சாரத் திருத்த முன்வடிவை திரும்பப் பெற வேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

2003ஆம் ஆண்டு மின்சாரத் திருத்தச் சட்டத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத் திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், மத்திய அரசால் கொண்டுவரப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத் திருத்தமுடிவு, தனியார் மின் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், பொதுத்துறையை பாதிக்கும் வகையிலும் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், மாநில அரசு நிறுவனங்களில் தலையிடுவதாக உள்ளதால், இந்த மின்சாரத் திருத்த முன்வடிவை திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!