இந்தியா-பாக் போட்டியை கண்ட ரசித்த சி.ஐ.எஸ்.எப் வீரர்கள்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியை, மும்பையில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்கள் கண்டு ரசித்தனர்.

துபாயில் நடைபெற்ற 7-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-12 சுற்றில், இந்திய அணி தமது தொடக்க ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் வீழ்ந்தது.

நேரலையில் ஒளிபரப்பப்பட்ட இந்த போட்டியை, மும்பையில் உள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்கள் ஒன்று கூடி பார்த்தனர். அப்போது, உயர் அதிகாரிகளும் ஆர்வமுடன் கிரிக்கெட் போட்டியை கண்டு களித்தனர். எனினும் இந்த போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!